மும்பையில் விமானம் விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

மும்பை விமான விபத்து: இரு விமானிகள், இரு விமானப்படை பராமரிப்பு பொறியாளர்கள் மற்றும் தரையில் ஒருவர் இறந்து கிடந்தார் என Directorate General of Civil Aviation தகவல்.

Last Updated : Jun 28, 2018, 06:02 PM IST
மும்பையில் விமானம் விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு! title=

மும்பை விமான விபத்து: இரு விமானிகள், இரு விமானப்படை பராமரிப்பு பொறியாளர்கள் மற்றும் தரையில் ஒருவர் இறந்து கிடந்தார் என Directorate General of Civil Aviation தகவல்.

 

 

 

 

மும்பையில் தனி விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி உள்ளது. முதற்கட்ட தகவலின் படி இந்த விமான விபத்தில் ஒருவர் பலியானதாகவும். இருவர் படுகாயம் அடைந்துள்ள தாகவும் தெரியவந்துள்ளது.

 

 

 

 

இந்த விபத்து மும்பையின் கட்டோபர் பகுதி ஜக்ருதி கட்டிடத்தின் முன் ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் விபத்துக்குள்ளானதில் தீ பிடித்தது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த வீடியோ ANI டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

 

தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ பிடித்து எரியும் அந்த தனி விமானத்தை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

மும்பை Ghatkopar-ல் நடைபெற்ற இந்த விமான விபத்து உ.பி. அரசு சொந்தமானது அல்ல. மும்பை யு.ஐ.ஓ விமான நிறுவனத்திற்கு மாநில அரசு விற்றுள்ளது. இந்த ஒப்பந்தமானது அலகாபாத்தில் விமான விபத்துக்கு பிறகு நடைபெற்றது என முதன்மை செயலாளர் அவானிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

 

 

Trending News